தொலைந்து போன எனது கல்லூரிநாட்கள் .....!!!!
கடைசி
இருக்கைகளில் படித்தும் படிக்காமலும்,
தூங்கியும்
தூங்காமலும் தொடர்ந்த விரிவுரைகள்
நெரிந்து
சென்றாலும் வலி தெரியாத பஸ் பிரயாணங்கள்
மரத்தடிகளில்
நடாத்திய வட்ட மேசை மாநாடுகள்
கல்லடித்து
சாப்பிட்ட விளாங்காய்கள்
புளியங்காய் தேடி
அலைந்த வெயில் பொழுதுகள்
கிண்டலடித்து
சிரித்து மகிழ்ந்த இனிய நேரங்கள்
“Group study” என்று சொல்லி அரட்டை அடித்த பொழுதுகள்
சண்டைகள் பல
பிடித்தாலும் மறுநிமிடம்
சிநேகமாய்
சிரிக்கும் தோழிகளின் நட்புலகம்
விடுமுறை என்று
வீடு
சென்றாலும்
தொலைபேசிகளை
தொல்லைபேசிகளாக்கியதும்
இதழோரம்
புன்னகையுடன் மீட்டிப்
பார்க்கிறேன்
தொலைந்த அந்த கல்லூரி நாட்களை!!!!
மீண்டும் வருமா
என்ற ஏக்கத்தோடு ???
-ஜென்னி ஞானசோதியன்
No comments:
Post a Comment